மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 02.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 எனும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 01.02.2021 அன்று நடைபெற்ற தொடக்க விழாவை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக (02.02.2021) முற்பகல் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் முனைவர் ப. விமலா அண்ணாதுரை, தமிழ்த்துறைத் தலைவர், செல்லம்மாள் மகளிர் கல்லூரி, அவர்கள் ‘மரபிலக்கணங்களும் அமைப்பியல் தன்மையும் ‘ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் தலைமையேற்க உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல் கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளைப் பொறுப்பாளரும் தமிழ்மொழி(ம) மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் பெ. செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் த. இராகுல்காந்தி நன்றியுரைத்தார். ஆய்வாளர் ஆ. சாருமதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
படச்செய்தி: செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. விமலா அண்ணாதுரை சொற்பொழிவு ஆற்றுகிறார். உடன்: நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர்
பெ. செல்வக்குமார், ஆய்வு மாணவி ஆ.சாருமதி மற்றும் ஆய்வு மாணவர் த.இராகுல் காந்தி.