சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 02.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 எனும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று (02.02.2021) பிற்பகல் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. முனைவர் மு.அப்துல்ரசாக் துறைத்தலைவர், கலைப்புல முதன்மையர் புதுக்கல்லூரி சென்னை அவர்கள் ‘தமிழ் மலையாள நாவல்களில் இசுலாமிய வாழ்வியல்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் தலைமையேற்க உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம், உதவிப்பேராசிரியர் முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார். அயல்நாட்டுத் தமிழர் புலம் உதவிப்பேராசிரியர் முனைவர் சிதம்பரம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அறக்கட்டளைப் பொறுப்பாளரும் தமிழ்மொழி(ம) மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் பெ. செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் த. இராகுல்காந்தி நன்றியுரைத்தார். ஆய்வாளர் க.சிந்தாமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
படச்செய்தி: இடமிருந்து வலம் நிறுவன உதவிப் பேராசிரியர் கு.சிதம்பரம், புதுக்கல்லூரி துறைத்தலைவர் முனைவர் மு.அப்துல்ரசாக், நிறுவன உதவிப் பேராசிரியர் மணிக்கோ பன்னீர்செல்வம் மற்றும் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் பெ.செல்வக்குமார்.