ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளை (ம) ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 04.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நான்காவது நாளாக (04.02.2021) முற்பகல் ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளைச் சார்பாக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மீனாட்சி மகளிர் கல்லூரி, வரலாற்று துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் கே.எ.கவிதா அவர்கள் ‘இராஜேந்திர சோழன் காலச் சிவ பண்டிதர்களின் கோயிற்கலைப் பணிகள்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளைச் சார்பாக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அக்சிலியம் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர் முனைவர் நா.குமாரி அவர்கள் ‘சங்க இலக்கியம் காட்டும் குடும்பம்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.