டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை, ம.பொ.சி. அறக்கட்டளை (ம) தனிநாயக அடிகளார் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 08.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று எட்டாவது நாளாக (08.02.2021) முற்பகல் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் (ம) துறைத் தலைவர் முனைவர் சா.சரவணன் அவர்கள் ‘சைவத்தின் தொன்மையும் வளர்ச்சியும்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் சைவ சித்தாந்தம் தான் தமிழ் தத்துவம் என தனிநாயக அடிகார் குறிப்பிடுவார் என்றும் காதண்டு – மலையிலிருந்து பொருட்களை கொண்டு வர பயன்படுத்தப்பட்டது. காதண்டு பிற்காலத்தில் மருவி காவடி என ஆனது. தமிழ் நாகரீகத்தை புரிந்துகொள்வதில் சிந்துவெளி நாகரீகம் பயன்படுகிறது எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து ம.பொ.சி. அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ம.பாலு அவர்கள் ‘பெரிய புராணத்தில் புதுமையும் புரட்சியும்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவர் பேசுகையில் சைவ நெறியை தோற்றுவித்தவர் காரைக்கால் அம்மையார் எனவும் தமிழரின் தொன்மையான சமயம் சைவ சமயம் எனவும் குறிப்பிட்டார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.

பிற்பகல் தவத்திரு தனிநாயக அடிகளார் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் ம.பிரபாகரன் அவர்கள் ‘சங்க இலக்கிய வரையறை வரலாறு’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.