வள்ளல் சீதக்காதி அறக்கட்டளை, டாக்டர் மு.வ. அறக்கட்டளை (ம) உ.வே.சா. அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 13.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பதின்மூன்றாவது நாளாக (13.02.2021) முற்பகல் வள்ளல் சீதக்காதி அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சென்னை, இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் க.இளங்கோ அவர்கள் ‘இந்திய விடுதலைப் போரில் (தமிழக) இசுலாமியர்களின் பங்களிப்பு’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து டாக்டர் மு.வ. அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ச.நவநீத கிருஷ்ணன் அவர்கள் ‘பெருங்கோயில் ஆய்வுக்கான பேராசிரியர் தொ.பரமசிவத்தின் பங்களிப்பு’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.

(13.02.2021) முற்பகல் வள்ளல் சீதக்காதி அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர், திரு.மருதன் பசுபதி, அவர்கள் ‘திரைப்படப் பகுப்பாய்வு: உலகளாவிய பார்வை’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார்.