ஏ.வி.எம்.ஜபார்தீன் நூர்ஜகான் அறக்கட்டளை (ம) பதிப்புச்செம்மல் பேரா.ச.மெய்யப்பன் அறக்கட்டளை

நிகழ்வு நாள் : 14.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதிநான்காவது நாளான இன்று (14.02.2021) முற்பகல் ஏ.வி.எம்.ஜபார்தீன் நூர்ஜகான் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ம.செந்தில்குமார் அவர்கள் ‘திருமுருகாற்றுப்படையில் பதி இயல்புகள்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். தனது பொழிவில் திருமுருகாற்றுப்படையில் முருகன் பெருமைகளையும் ஆறுபடை வீடுகளைப் பற்றியும் பதி என்ற சொல்லுக்கு பொருள் விளக்கத்தையும் ஆற்றுப்படையில் காணப்படும் வழிபாட்டு முறையும் நம்பிக்கைளையும் எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து பதிப்புச்செம்மல் பேரா.ச.மெய்யப்பன் அறக்கட்டளைச் சார்பாகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திருச்செந்தூர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் வீ.லெட்சுமிநாராயணி அவர்கள் ‘தமிழ் நவீன இலக்கியங்களில் திருநங்கையர்’ என்ற பொருண்மையில் சொற்பொழிவு நிகழ்த்தினார். திருநங்கைகளைப் பற்றிய வாழ்வியல் செய்திகளையும் அவர்கள் சார்ந்த பல அறிய படாத கருத்துக்களையும் அவர்களுடைய உடல் அமைப்புக் கூறுகளையும் முழுமையாக தொகுத்துக் கூறினார். சொற்பொழிவுக்கு அறக்கட்டளைகள் பொறுப்பாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்றார். நிறுவன முனைவர் பட்ட மாணவர் சி.ஜெயமுருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆய்வியல் நிறைஞர் மாணவி ரா.ரம்யா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


படச்செய்தி: நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் ‘திருமுருகாற்றுப்படையில் பதி இயல்புகள்’, தமிழ் நவீன இலக்கியங்களில் திருநங்கையர்’, சங்க ஆற்றுப்படை இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல்’ ஆகிய நூல்களை வெளியிட்டார். உடன் முனைவர் ரெ.குணசுந்தரி அவர்கள், முனைவர் வீ.லெட்சுமிநாராயணி அவர்கள், முனைவர் ம.செந்தில்குமார் அவர்கள். முனைவர் பெ.செல்வக்குமார், அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் சு.தாமரப்பாண்டியன் அவர்கள், ஆய்வு மாணவர் சி.ஜெயமுருகன் மற்றும் மாணவி ரா.ரம்யா அவர்கள்