டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நிகழ்வு நாள் : 18.02.2019

டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று (18.02.2019) முற்பகல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையம், இணைப்பேராசிரியர், முனைவர் ப.மணிமாறன் அவர்களின் “இலக்கியங்கள் காட்டும் உளமொழியியல் பகுப்பாய்வும் கோட்பாடுகளும்” எனும் தலைப்பிலான சொற்பொழிவு நடைபெற்றது. அறக்கட்டளையின் பொறுப்பாளரும் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப்பேராசிரியருமான முனைவர் க.சுசீலா அவர்கள் வரவேற்புரையாற்றிட, முனைவர் த.மகாலெட்சுமி அவர்கள் நன்றி நவின்றார்.
படச்செய்தி: (இடமிருந்து வலம்) முனைவர் த.மகாலெட்சுமி, முனைவர் கா.காமராஜ், பொழிவாளர் முனைவர் ப.மணிமாறன், அறக்கட்டளையின் பொறுப்பாளரும் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப்பேராசிரியருமான முனைவர் க.சுசீலா, பேராசிரியர் பா.இராசா, முனைவர் சு.தாமரைப்பாண்டியன் மற்றும் முனைவர் ஜெ.ஜெகத்ரட்சகன்.