தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 30.09.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழாய்வு மன்றம், தமிழ் அநிதம் (அமெரிக்கா)
மற்றும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (ஆஸ்திரேலியா)
ஆகியன இணைந்து நடத்திய
தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்
பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும்
கன்னித் தமிழும் கணினித் தமிழும் நூல் வெளியீட்டு விழா

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 2019, செப்டம்பர் 30, திங்கட்கிழமை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழாய்வு மன்றம், தமிழ் அநிதம் (அமெரிக்கா) மற்றும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (ஆஸ்திரேலியா) ஆகியன இணைந்து நடத்திய “தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்” பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கன்னித் தமிழும் கணினித் தமிழும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் தலைமையில், நிறுவன அயல்நாட்டுத்தமிழர் புல உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி வரவேற்புரையாற்றிட, திருவள்ளுவர் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக இணைவேந்தருமான (திட்டம்-வளர்ச்சி) பேராசிரியர் ஆ. ஜோதி முருகன், தமிழ் அநிதம் (அமெரிக்கா) தலைவர் மற்றும் நிறுவனர் திருமதி சுகந்தி நாடார் ஆகியோர் நூல்களைப் பெற்று வாழ்த்துரை வழங்கினர், வேல்ஸ் பல்கலைக்கழக மொழிகள் புல முதல்வர் பேராசிரியர் ப. மகாலிங்கம் கருத்துரை வழங்கிட நூலாசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான வேல்ஸ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப்பேராசிரியருமான முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் ஏற்புரை நிகழ்த்தினார். வேல்ஸ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கி. துர்காதேவி அவர்கள் நன்றி நவின்றார். இந்நிகழ்வில் நிறுவனப் பேராசிரியர்கள், முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.