"தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை" தேசியக் கருத்தரங்கம்

நிகழ்வு நாள் : 22.11.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் சார்பில்
தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன்
தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை
தேசியக் கருத்தரங்கம்

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் சார்பில் தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை எனும் பொருண்மையிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் 22.11.2019 அன்று காலை 11 மணிக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றிட, கருந்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா அவர்கள் கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் பா. இராசா, இணைப் பேராசிரியர் பெ.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆய்வுக்கோவையை வெளியிட்டு, மைசூரு இந்திய மொழிகளின் தரவக திட்டத் தலைவரும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன மேனாள் இயக்குநருமான முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் பெ.சுயம்பு, இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் ந. முருகேசபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் ச.ஆசைக்கண்ணு அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் மா.ஆதிமூலம் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுரை வளமையர்கள் பங்கேற்று கட்டுரையை வாசித்தனர். கருத்தரங்க நிறைவு விழாவின் தொடக்கமாக முதுகலைத் தமிழ் இரண்டாண்டு மாணவர் தே.கஜீபன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் பா. இராசா அவர்கள் முன்னிலையுரையாற்றினர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மேனாள் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பாண்டிச்சேரி ஃபிரென்ஞ் ஆசியவியல் ஆய்வுப்பள்ளி (EFEO), முதுநிலை ஆய்வாளர் முனைவர் கோ.விசய வேணுகோபால் அவர்கள் கருத்தரங்க நிறைவுரையாற்றி கட்டுரை வளமையர்களுக்கு கட்டுரைத் தொகுதியும் சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக கருந்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா அவர்கள் கருத்தரங்க நன்றியுரையாற்றி நிறைவுசெய்தார். இந்நிகழ்ச்சியில் நிறுவன பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர், ஆய்வியல் நிறைஞர், முதுகலை மாணவர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
படச்செய்தி : சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன் தமிழ் இலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை எனும் பொருண்மையிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் 22.11.2019 அன்று காலை 11 மணிக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இதில் இணைப் பேராசிரியர் பெ.செல்வக்குமார், இலக்கியத் திறனாய்வாளர் முனைவர் ந. முருகேசபாண்டியன், மைசூரு இந்திய மொழிகளின் தரவக திட்டத் தலைவரும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன மேனாள் இயக்குநருமான முனைவர் எல்.இராமமூர்த்தி, கருந்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புல உதவிப் பேராசிரியருமான முனைவர் நா.சுலோசனா, ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் பெ.சுயம்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் பா. இராசா, முனைவர் பட்ட ஆய்வாளர் ச.ஆசைக்கண்ணு.