புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும் – பன்னாட்டுக் கருத்தரங்கம் - நிறைவு விழா

நிகழ்வு நாள் : 06.02.2020

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும் தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் ஆறாம் நாள் (06.02.2020) நிகழ்வாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் சார்பில் “புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும்” எனும் பொருண்மையில் அமைந்த இரண்டு நாள் (05.02.2020 – 06.02.2020) பன்னாட்டுக் கருத்தரங்கில் அமர்வுகளும், கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் நிறைவு விழா நடைபெற்றது.
படச்செய்தி : 06.02.2020 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்த்தாய்72- தமிழாய்வுப் பெருவிழாவில் நடத்தப்பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கு நிறைவு விழாவில் நடைபெற்ற நூல் வெளியீடு நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களுடன், நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் பு.இலக்கியத் தென்றல், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளருமான முனைவர் நா.சுலோசனா, நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சு.பாலசுப்பிரமணியன், நிறுவன முதுகலை மாணவர் சந்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர் பா.உமா சங்கரி.