72 அரிய நூல்கள் மற்றும் 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு

நிகழ்வு நாள் : 24.02.2020

தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழா
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின்
72ஆவது பிறந்தநாள் விழா
72 அரிய நூல்கள் மற்றும் 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 24.02.2020 இன்று 72 அரிய நூல்கள் மற்றும் 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீட்டு விழாவும், தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன் நடத்தப்பட்ட திருக்குறள் ஓவியக் காட்சிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 15 படைப்பாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்றன. இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் தலைமையுரையாற்றிட, தமிழ்நாடு கல்விக் கழக மேனாள் செயலாளர் முனைவர் கரு.நாகராசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான திரு. க. பாண்டியராஜன் அவர்கள் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டு ஆய்விருக்கை ஆய்வு உதவியார் முனைவர் ஈ. விஜய் அவர்கள் வரவேற்புரையாற்றிட. நிறுவன நூலகர் முனைவர் பி. கவிதா அவர்கள் நன்றி நவின்றார்.

படச்செய்தி : மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72ஆவது பிறந்தநாள் விழாவில் (24.02.2020) மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான திரு. க. பாண்டியராஜன் அவர்கள் 72 அரிய நூல்கள் மற்றும் 138 ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டார். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்.